பொள்ளாச்சி அருகே மின்சார கம்பி உரசி தென்னை நார் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மின்சார கம்பி உரசி தென்னை நார் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து கருகி நாசமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள கம்பாலபட்டியில் தனியாருக்கு சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து லாரி மூலம் 50 ஆயிரம் மதிப்புள்ள 125 பெண்டல் தென்னை நாரை வெள்ளாளபாளையம் பகுதிக்கு ஏற்றி செல்லப்பட்டது.

அப்போது, கம்பாலபட்டி சாலையில் வந்து கொண்டிருக்கும்போது தாழ்வான பகுதியில் மின் கம்பி உரசியதால் லாரியில் இருந்த தென்னைநார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட லாரி ஓட்டுநர் கலைச்செல்வன் வண்டியை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரும் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென எரியத்தொடங்கியது.



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், லாரியும் தென்னை நாரும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...