கோவை.கோ நிறுவனத்திற்கு நாஸ்காம் மெர்ஜிங் 50-விருது

கோவை.கோ நிறுவனத்துக்கு, மென்பொருள் சேவை பிரிவில் எமர்ஜ் 50-விருது 2021-ஐ, வழங்க நாஸ்காம் அங்கீகரித்துள்ளது.


கோவை: கோவை.கோ நிறுவனத்துக்கு, மென்பொருள் சேவை பிரிவில் எமர்ஜ் 50-விருது 2021-ஐ, வழங்க நாஸ்காம் அங்கீகரித்துள்ளது.

பன்னோக்கு மென்பொருள் சேவை நிறுவனமாக திகழும் கோவை.கோ, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றம் அறிவுசார் மேலாண்மையை இந்தியாவில் கோவையிலும், இங்கிலாந்தில் லண்டனிலும் தலைமயிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு, மென்பொருள் சேவை பிரிவில் எமர்ஜ் 50-விருது 2021-ஐ, வழங்க நாஸ்காம் அங்கீகரித்துள்ளது.

எதிர்கால மென்பொருள் சேவையில், ஒரு தனித்துவத்தையும், புதுமையையும் படைக்கவல்ல மென்பொருள் நிறுவனங்களை அறிந்து, அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நாஸ்காம் எமர்ஜ் 50-விருதை வழங்கி வருகிறது. இந்தியாவில் மென்பொருள் சேவை நல்ல வளர்ச்சி பெற்று வரும் சூழலில், புதுமை படைக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 5 மாடல்களை நாஸ்காம் கண்டறிந்து, அவற்றை அங்கீகரிக்கிறது. இந்த வகையில், பல்வகை தீர்வுகளை மொபைல் மென்பொருள் சேவை முதல் பை மற்றும் அலசி ஆராய்தல் வரை உள்ளடக்கம்.

கோவை.கோ வின் முன்னணி தயாரிப்புகளான டாக்குமென்ட் 360, #1 தர வரிசையில் வளர்ச்சி பெற்று வரும் நிறுவனங்களின் முன்னணியில் உள்ளது. பயனீட்டாளர்கள், உடனடியாக உருவாக்கி, ஒருங்கிணைத்து மேலாண்மை செய்பவர்களாக இருப்பர். நாஸ்காம் அளித்த இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்தார். கோவை.கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார் எங்களது தயாரிப்புகளான பிஸ்டாக்ஸ் 360 மற்றும் செர்வர்லெஸ் 360 போன்றவை அறிவுசார் தீர்வுகளை பெற சவால்களையும் கடினங்களையும் கடந்து வந்துள்ளது. டாகுமென்ட் 360 தயாரிப்பானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் பல்வேறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. விரைவான வளர்ச்சி பெற்று வரும் கோவை.கோவின் தயாரிப்பு இதுவாகும்.

நாஸ்காம் ன், 2021ம் ஆண்டிற்கான, "சாஸ் விருது" பெற, மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில், இறுதியாக கோவை.கோ வெற்றி பெற்றது. எமர்ஜ் 50 விருது 2021 ல், பைன் டெக், ஹெல்த் டெக், ரிடைல் டெக், லாஜிஸ்டிக்ஸ், நிறுவனங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவுகள் மற்றும் பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

"நாஸ்காம் எமர்ஜ் 50 விருது, சிறப்பான தன்னுரிமையை அளித்ததோடு, எங்களுக்கு கவுரவத்தையும் பெருமையையும் அளிக்கிறது. #TogetherWeGrow என்ற எங்களது டேக் லைன் படி, எங்களது வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் ஆதரவின்றி இத்தகைய மாபெரும் விருதை பெற்றிருக்க முடியாது. கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்ளில் 250க்கும் மேற்பட்டோரை கொண்ட குழுவிற்கு இது மாபெரும் பெருமைமிக்க தருணம். எங்களை போன்ற நிறுவனங்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார் நிறுவனர் சரவணக்குமார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...