மதுரையிலிருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு கொண்டு வந்த துளசி இலை மூட்டையில் பாம்பு - வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம்..!

இதையடுத்து, உடனடியாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் பாம்பை அடர்ந்த வனத்தில் விட்டனர்.


கோவை: மதுரையிலிருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு கொண்டு வந்த துளசி இலை மூட்டையில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூமார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திண்டுக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஓசூர், ஊட்டி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பூக்கள் மற்றும் துளசி உள்ளிட்டவை கொண்டுவரப்படுகின்றன.

மேலும், இங்கு இருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் இங்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பூக்கள் ஏலம் விடப்பட்டு அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், மதுரையில் இருந்து கோவை பூமார்க்கெட்டுக்கு துளசி இலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. துளசி இலை மூட்டையை விற்பனையாளர்கள் திறந்து பார்த்தனர். அப்போது துளசி மூட்டையின் உள்ளே துளசிக்குள் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டு இருந்தது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அவர்கள் அந்த துளசி மூட்டையை விட்டு பாம்பு வெளியே வராதவாறு கயிற்றால் கட்டிவைத்தனர். இதற்கிடையே துளசி மூட்டையில் பாம்பு இருந்த சம்பவம் பூமார்கெட் பகுதியில் பரவியது. இதனால் அங்கு இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் பூ வியாபாரிகள் இதுகுறித்து விலங்கு மீட்பு அமைப்பை சேர்ந்த விவேக் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.



பின்னர் அந்த துளசி மூட்டையில் இருந்த பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து விவேக் கூறியதாவது:-

பூமார்க்கெட்டுக்கு வந்த துளசி மூட்டையில் இருந்தது கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் பாம்பு ஆகும். அதை உடனே மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அதை அடர்ந்த வனத்தில் விட்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...