திருப்பூரில் சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள்..! கர்ப்பிணிகள் அதிர்ச்சி..!!

விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.



அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக், 500 மில்லி ஆவின் நெய், பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு, பிளாஸ்டிக் கூடை ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.



இதனிடையே, திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரிட்ச்சம் பழம் காலாவதியாகி ஒரு மாதமாகிறது.



அதேபோல், நெய் இன்னும் ஒரு நாளில் காலாவதியாக உள்ளது. விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும்.

எனவே, அலட்சியமாக இருக்காமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...