விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.

அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக், 500 மில்லி ஆவின் நெய், பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு, பிளாஸ்டிக் கூடை ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரிட்ச்சம் பழம் காலாவதியாகி ஒரு மாதமாகிறது.

அதேபோல், நெய் இன்னும் ஒரு நாளில் காலாவதியாக உள்ளது. விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும்.
எனவே, அலட்சியமாக இருக்காமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.
அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக், 500 மில்லி ஆவின் நெய், பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு, பிளாஸ்டிக் கூடை ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.
இதனிடையே, திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரிட்ச்சம் பழம் காலாவதியாகி ஒரு மாதமாகிறது.
அதேபோல், நெய் இன்னும் ஒரு நாளில் காலாவதியாக உள்ளது. விபரம் தெரியாத கர்ப்பிணிகள், இவற்றை சாப்பிட்டால் ஆபத்தாக முடியும்.
எனவே, அலட்சியமாக இருக்காமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.