மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனுடைய முடிவு நாளை தெரியவரும்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்கு பரிசோதனையில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னுடைய முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், முன் பகுதி, வாசல் ஆகிய பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 மாடி கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மை துறை, வருவாய்த்துறை, புவியியல் ஆராய்ச்சி துறை, சமூக நலத்துறைஉட்பட பல்வேறு விதமான அரசு துறைகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு அலுவலகத்திலும் 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்துஉடனடியாக இன்று பணிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனுடைய முடிவு நாளை தெரியவரும். அதனால் இருமல், சளிக் காய்ச்சல் உள்ள அலுவலர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், முன் பகுதி, வாசல் ஆகிய பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 மாடி கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மை துறை, வருவாய்த்துறை, புவியியல் ஆராய்ச்சி துறை, சமூக நலத்துறைஉட்பட பல்வேறு விதமான அரசு துறைகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு அலுவலகத்திலும் 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்துஉடனடியாக இன்று பணிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனுடைய முடிவு நாளை தெரியவரும். அதனால் இருமல், சளிக் காய்ச்சல் உள்ள அலுவலர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.