மேலும், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வேட்புமனுக்கள் பெறும் அலுவலகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வேட்பு மனுத்தாக்கல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல் நாளான இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு படிவங்களைப் பெற பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு.
உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின் அனுமதித்து வருகின்றனர்.
மேலும், வேட்பு மனுக்கள் பெறப்படும் 8 இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.