வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பு, பக்தர்கள் மகிழ்ச்சி; கோவை கோனியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.

கோவை தண்டுமாரியம்மன், பேரூர், மருதமலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்தது போல, கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மைக் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.


கோவை: கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறப்பதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டுத்தலங்கள் மூடல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில்,கொரோனா மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி புது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றிலிருந்து அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி, இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை நீக்கப்பட்டுள்ளது. 

வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வாரங்களுக்கு பிறகு, இன்று வெள்ளிக்கிழமை கோவை கோனியம்மன் கோவிலில், பக்தர்கள் சிறப்பாக வழிபட்டனர். 



அதைப்போல, கோவை தண்டுமாரியம்மன், பேரூர், மருதமலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்தது போல, கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மைக் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...