கோவை தண்டுமாரியம்மன், பேரூர், மருதமலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்தது போல, கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மைக் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை: கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் திறப்பதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டுத்தலங்கள் மூடல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்,கொரோனா மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி புது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றிலிருந்து அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி, இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வாரங்களுக்கு பிறகு, இன்று வெள்ளிக்கிழமை கோவை கோனியம்மன் கோவிலில், பக்தர்கள் சிறப்பாக வழிபட்டனர்.

அதைப்போல, கோவை தண்டுமாரியம்மன், பேரூர், மருதமலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்தது போல, கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மைக் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டுத்தலங்கள் மூடல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்,கொரோனா மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி புது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றிலிருந்து அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி, இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வாரங்களுக்கு பிறகு, இன்று வெள்ளிக்கிழமை கோவை கோனியம்மன் கோவிலில், பக்தர்கள் சிறப்பாக வழிபட்டனர்.
அதைப்போல, கோவை தண்டுமாரியம்மன், பேரூர், மருதமலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்தது போல, கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு மைக் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.