கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவைச் சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் 14 பேர் கலந்துகொண்டு 11 நிமிடங்கள் பரதநாட்டிய நடனமாடினர்.
கோவை: டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பரதநாட்டியம் ஆடிய கோவை மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
73வது குடியரசு தினத்தில், டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது.
இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பிற மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இந்திய நாட்டின் பெருமையை பறை சாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விதமாக மாநிலங்களின் நடனம் மற்றும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவைச் சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் 14 பேர் கலந்துகொண்டு 11 நிமிடங்கள் பரதநாட்டிய நடனமாடினர்.

இதனையடுத்து, கோவை திரும்பிய அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கலைத்துறையினர் அவர்களுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்பு அளித்தனர்.