கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அந்தந்த அலுவலகத்தில் வாங்கிச்செல்கின்றனர்.
இன்று காலை முதல் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை வாங்க வரும் வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்பாளர்களுக்கு அலுவலக நுழைவாயிலில் கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. மேலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி வேட்பாளர்கள் வேட்புமனு விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர்.
மேலும், இன்று முதலே வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அந்தந்த அலுவலகத்தில் வாங்கிச்செல்கின்றனர்.
இன்று காலை முதல் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை வாங்க வரும் வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்பாளர்களுக்கு அலுவலக நுழைவாயிலில் கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. மேலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி வேட்பாளர்கள் வேட்புமனு விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர்.
மேலும், இன்று முதலே வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.