இந்த சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாலக்காடு ரோடு நவக்கரை அடுத்த திருமலையம்பாளையம் மூங்கில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. இவர் விவசாய கூலித் தொழிலாளியாக கடந்த 20 ஆண்டுகளாக கார்த்திக் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
மேலும், சின்னராசு தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் கிருஷ்ணகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று காலை தோட்டத்தில் அவரது இரண்டாவது மகன் கிருஷ்ணகுமார் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்தது. இதையடுத்து, கிருஷ்ணகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாலக்காடு ரோடு நவக்கரை அடுத்த திருமலையம்பாளையம் மூங்கில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. இவர் விவசாய கூலித் தொழிலாளியாக கடந்த 20 ஆண்டுகளாக கார்த்திக் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
மேலும், சின்னராசு தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் கிருஷ்ணகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்று காலை தோட்டத்தில் அவரது இரண்டாவது மகன் கிருஷ்ணகுமார் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்தது. இதையடுத்து, கிருஷ்ணகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.