வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவை: வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021- 22 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 14,557 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு தொடர்பாக மின் வாரிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளும் போது தேவையில்லாமல் தாமதப்படுத்தினாலோ அல்லது தவறான எதிர்பார்ப்புடன் விவசாயிகளை அழிப்பு செய்தாலோ தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர் அல்லது தலைமைப் பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021- 22 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 14,557 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு தொடர்பாக மின் வாரிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளும் போது தேவையில்லாமல் தாமதப்படுத்தினாலோ அல்லது தவறான எதிர்பார்ப்புடன் விவசாயிகளை அழிப்பு செய்தாலோ தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர் அல்லது தலைமைப் பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.