நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022: கோவையில் 24 பறக்கும் படை; ரூ.50,000 மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆவணம் காண்பிக்க வேண்டும்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக, கோவையில் 24 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலை நடத்துவது என்ற அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை இன்று வெளியிடவுள்ளனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், என 811 பதிவிகளுக்கான நேரடி தேர்தல் நடைபெறவிருகின்றது. கோவையில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளது. 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு, நாளை முதல் வேட்புமனு பெறப்படும்.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் 24 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாகவும், உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...