பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவை: பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பனங்காட்டு படை கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் குட்டி என்ற யோவேல் நாடார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் எங்கள் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகோபாலகிருஷ்ணன் என்ற ஹரி நாடார் என்பவரை ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டுவதாகவும், சில நபர்களின் தூண்டுதலின் பேரில் பனங்காட்டு படை கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்து மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு, விசாவின் அடிப்படையில் இந்தியாவில் பல மாதங்களாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பனங்காட்டு படை கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் குட்டி என்ற யோவேல் நாடார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் எங்கள் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகோபாலகிருஷ்ணன் என்ற ஹரி நாடார் என்பவரை ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டுவதாகவும், சில நபர்களின் தூண்டுதலின் பேரில் பனங்காட்டு படை கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்து மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு, விசாவின் அடிப்படையில் இந்தியாவில் பல மாதங்களாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.