கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் உள்ள தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலய வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை நேற்று முன் தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆலய நிர்வாகிகள், மற்றும் ஆலயத்தில் பணிபுரிவோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கண்டனங்களைத் தெரிவித்தனர்.

கிறிஸ்துவ மக்களிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் ஆலயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி தேவாலய வாயிலில் உள்ள செபஸ்தியர் சிலையை நேற்று முன் தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆலய நிர்வாகிகள், மற்றும் ஆலயத்தில் பணிபுரிவோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கண்டனங்களைத் தெரிவித்தனர்.
கிறிஸ்துவ மக்களிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் ஆலயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.