காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதை அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவை: கோவை வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் பகுதியில் அசாம் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் சையது அலி என்பவரின் வீட்டை ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

இதில் சுவரின் கற்கள் வீட்டிலிருந்த சையது அலி மற்றும் பெரிதா பேகம் அவர்களின் மீது விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், யானை இடித்து சேதப்படுத்தியதை அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு வீடுகளை சரி செய்து தரவும், தெரு விளக்கு அமைக்க நகராட்சி மூலம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் பகுதியில் அசாம் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் சையது அலி என்பவரின் வீட்டை ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
இதில் சுவரின் கற்கள் வீட்டிலிருந்த சையது அலி மற்றும் பெரிதா பேகம் அவர்களின் மீது விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், யானை இடித்து சேதப்படுத்தியதை அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு வீடுகளை சரி செய்து தரவும், தெரு விளக்கு அமைக்க நகராட்சி மூலம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பாதுகாப்பு தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.