பள்ளி மாணவ மாணவியர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழியை முன்மொழிய உறுதிமொழி ஏற்றனர்.
கோவை: இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்உறுதிமொழி ஏற்கப்பட்டது.
"இந்திய குடிமக்களாகிய நாங்கள் , ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் கண்ணியத்தையும், நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும், எவ்வித அச்சமின்றி மதம், இனம், சாதி, சமூகத்தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றியும் வாக்காளிப்போம்" என் உறுமொழி ஏற்கப்பட்டது,
இதில், பள்ளி மாணவ மாணவியர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆகியோர்மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழியை முன்மொழியஉறுதிமொழி ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து, கோவை அரசு பள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி ,கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.