சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தார்.
திருப்பூர்: திருப்பூரில் தனது சொத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்தை 2021ம் ஆண்டு கிரையம் செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இவரது காலியிடம் அருகே உள்ள மனைப் பிரிவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரது காலியிடம் இந்த மனைப்பிரிவில் இருந்து கொடுக்கப்பட்டதாக சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மனைப் பிரிவை சேர்ந்த நபர்களை தனக்கு எதிராக தூண்டி விட்டு தனது சொத்தை அபகரிக்க நினைத்து தன் மீது தவறான பொய் புகார் அளிக்கப்படுவதாகவும், தனது காலியிடமும் குறிப்பிட்ட மனைப் பிரிவும் தனித் தனி இடம் எனவும் தனக்கும் தனது சொத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்தை 2021ம் ஆண்டு கிரையம் செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இவரது காலியிடம் அருகே உள்ள மனைப் பிரிவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவரது காலியிடம் இந்த மனைப்பிரிவில் இருந்து கொடுக்கப்பட்டதாக சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மனைப் பிரிவை சேர்ந்த நபர்களை தனக்கு எதிராக தூண்டி விட்டு தனது சொத்தை அபகரிக்க நினைத்து தன் மீது தவறான பொய் புகார் அளிக்கப்படுவதாகவும், தனது காலியிடமும் குறிப்பிட்ட மனைப் பிரிவும் தனித் தனி இடம் எனவும் தனக்கும் தனது சொத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.