இன்று கோவை கணபதி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவியின் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: அரியலூர் மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் தான், பள்ளியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற தன்னை வற்புறுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமந்தப்பட்ட பள்ளியின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும், என்று இந்து அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டும், சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை கணபதி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவியின் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இதனை வலியுறுத்தி கோவையில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை இன்று மேற்கொண்டனர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று கோவை கணபதி அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாணவியின் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இதனை வலியுறுத்தி கோவையில் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை இன்று மேற்கொண்டனர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.