குடியரசு தின விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் தீவிர சோதனை..!

மேலும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.



கோவை: குடியரசு தின விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாயுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், ரயில் தண்டவாளங்கள், பார்சல் அலுவலகத்தில் மோப்ப நாயுடனும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.



மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித்திருந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தற்போது கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளதால் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...