பிரதமரின் படத்தை பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி மாட்டிய பாஜக நிர்வாகி கைது

கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை மாட்டியதுடன், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை மாட்டியதுடன், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை பாஜக தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதியின்றி அலுவலகத்துக்குச் சென்றனர்.

மேலும் அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இதற்கு பேரூராட்சி செயலாளர் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக கவசம் அணியாமலும் கும்பலாக அலுவலகத்திற்குள் வந்து அனுமதி இல்லாமல் புகைப்படத்தை வைத்ததாகப் புகார் தெரிவித்தனர்.

இதனால் பாஜகவினர் மற்றும் செயல் அலுவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் புகைப்படத்தை மாட்டி விட்டு அலுவலகத்துக்குள் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பாஜகவினர் மீது செயல் அலுவலர் ரங்கசாமி ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். பின்னர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் வைத்தல், மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பா.ஜ.க அமைப்பு சார் தொழிலாளர் மாவட்ட தலைவர் பாஸ்கரன்( 39 ) இளைஞரணி செயலாளர் முருகேசன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இன்று காலை பாஸ்கரனை ஆலந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...