பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்

பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் மீது சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சி மின்கரை ரோட்டில் மையதடுப்பில் தடம்புரண்டு சென்ற அரசு பேருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அரசு பேருந்துஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டுவேட்டைக்காரன் புதூரை அடுத்த காளியாபுரம் நோக்கிச் சென்றது. மீன்கரை சாலையில்சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து சாலையின் நடுவில் இருந்த மையத்தடுப்பு சுவரில் ஏறியது. தொடர்ந்து பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மையத்தடுப்பின் மீதே சென்றதால் பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

அரை கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு மீண்டும் சாலையில் இறங்கிப் பயணித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...