ஊரடங்கு விதிமீறல்: பொள்ளாச்சியில் மட்டும் ரூபாய் 5.92 லட்சம் அபராதம்

பொள்ளாச்சியில் மட்டும் ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது, மொத்தம் 1875-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 5-லட்சத்து 92-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், ஊரடங்கு விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ரூபாய் 5.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட முக்கிய இடங்களில் டி.எஸ்.பி தமிழ்மணி உத்தரவின் பேரில் போலீசார்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மருத்துவ அவசரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தடையை மீறி செல்லும் பிறவாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில், முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 1271-பேருக்குமொத்தம் 2-லட்சத்து 90-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 90-வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.45-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வந்த 514-வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ 2-லட்சத்து 57-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொள்ளாச்சி உட்கோட்ட சரகத்திற்குட்பட்ட பகுதியில் மட்டும் போலீஸ் மூலம், மொத்தம் 1875-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 5-லட்சத்து 92-ஆயிரத்து 800-அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...