கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம்

ஆர்.எஸ்.புரம் அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை:பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி சரஸ்வதி (52). இவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மேலும் கூலி வேலைக்குச் சென்று வந்த சரஸ்வதி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மகன் சந்திரசேகர் உணவகத்தில் வேலை செய்துதனது குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார்.

அடிக்கடி தனது தாயாரை சந்திரசேகர் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். மேலும் சரஸ்வதிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அதற்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சரஸ்வதி வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் சந்திரசேகரைத் தொடர்புகொண்டு அம்மாவின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்ளது என்றும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, சந்திரசேகர் தனது அம்மா வீட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சந்திரசேகர் ஆர்.எஸ்.புரம்காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை அழுகிய நிலையிலிருந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நலக் குறைவினால் சரஸ்வதி இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...