1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு 99.24 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யும் வகையிலும் தேவை அதிகரித்தால் 25.42 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் செய்யும் வகையிலும் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திட்ட விளக்கம் குறித்த கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு 99.24 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யும் வகையிலும் தேவை அதிகரித்தால் 25.42 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் செய்யும் வகையிலும் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திட்ட விளக்கம் குறித்த கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.