இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ரங்கேகவுண்டர்புதூர் ஆத்துகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி(63), இவரது மகன் ஆனந்த்(36) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஆனந்திற்கு திருமணமாகாத நிலையில் அமுதா என்ற திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வரும் ஆனந்த் அமுதாவிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததால் ஆனந்தை விட்டு அமுதா சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஆனந்த் நேற்று மதுபோதையில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ரங்கேகவுண்டர்புதூர் ஆத்துகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி(63), இவரது மகன் ஆனந்த்(36) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஆனந்திற்கு திருமணமாகாத நிலையில் அமுதா என்ற திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வரும் ஆனந்த் அமுதாவிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததால் ஆனந்தை விட்டு அமுதா சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஆனந்த் நேற்று மதுபோதையில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.