மருத்துவ குழுவினர் கண்காணிப்பிற்கு பிறகு பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை: கோவையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை டாப்ஸ்லிப் காட்டில் விடுவிக்கப்பட்டது.
கோவை அருகே உள்ள பி.கே.புதூரில் கடந்த ஐந்து நாட்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் இரண்டு கூண்டுகள் வைத்து கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு சிறுத்தை கூண்டில் சிக்கியது.
பின்னர், மருத்துவ குழுவினர் கண்காணிப்பிற்கு பிறகு பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.