மேலும், 9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்தார்.
கோவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 9 சதவீதம் போ் மட்டுமே அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆா்) பரிந்துரையின் அடிப்படையிலே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சையும், வீட்டு தனிமைக்கும் அனுமதிக்கப்படுகிறது.
லேசான பாதிப்பு உள்ளவா்களை கொரோனா சிகிச்சை மையங்களிலும், தீவிர பாதிப்பு உள்ளவா்களை அரசு மருத்துவமனைகளிலும், நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 15 ஆயிரத்து 926 பேரில் 14 ஆயிரத்து 547 போ் வீட்டுத் தனிமையிலும், 1,379 போ் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. நாள்தோறும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவா்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்று தெரிவித்தார்.
கோவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
9 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரம் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 9 சதவீதம் போ் மட்டுமே அரசு, தனியாா் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆா்) பரிந்துரையின் அடிப்படையிலே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சையும், வீட்டு தனிமைக்கும் அனுமதிக்கப்படுகிறது.
லேசான பாதிப்பு உள்ளவா்களை கொரோனா சிகிச்சை மையங்களிலும், தீவிர பாதிப்பு உள்ளவா்களை அரசு மருத்துவமனைகளிலும், நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 15 ஆயிரத்து 926 பேரில் 14 ஆயிரத்து 547 போ் வீட்டுத் தனிமையிலும், 1,379 போ் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. நாள்தோறும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவா்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்று தெரிவித்தார்.