தினசரி சந்தையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட தென்னம்பாளையம் தினசரி சந்தையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் தென்னம் பாளையம் தினசரி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தினமும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.
அதேபோல, சில்லறை வியாபாரத்திற்கான கடைகளும் ஏராளமாக உள்ளதால் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் பகுதியாக உள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடங்களை பார்வையிட்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து சந்தையில் நீர் தேங்கும் வகையில் சாலை உள்ளதாகவும், அதனை சரி செய்து காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும், அதிக பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் கழிவறை வசதி செய்து தர வேண்டும் மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்து காலதாமதம் செய்யாமல் உடனடியாக கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் தென்னம் பாளையம் தினசரி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தினமும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான வியாபாரிகள் மொத்த கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.
அதேபோல, சில்லறை வியாபாரத்திற்கான கடைகளும் ஏராளமாக உள்ளதால் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் பகுதியாக உள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடங்களை பார்வையிட்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து சந்தையில் நீர் தேங்கும் வகையில் சாலை உள்ளதாகவும், அதனை சரி செய்து காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும், அதிக பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் கழிவறை வசதி செய்து தர வேண்டும் மற்றும் மின் விளக்கு வசதிகள் செய்து காலதாமதம் செய்யாமல் உடனடியாக கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.