கோவையில் ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை புதுப்பித்தல்‌ பணிகளுக்கு பூமிபூஜை துவக்கம்..!

6.06 கிலோ மீட்டர் தொலைவில் புதுப்பித்தல்‌ பணிகளுக்கு பூமிபூஜை செய்து மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலங்களில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌கீழ்‌ ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ 6.06 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை புதுப்பித்தல்‌ பணிகளுக்கும்‌, கிழக்கு மண்டலத்தில்‌ விளாங்குறிச்சியிலுள்ள கோனார்‌ குட்டையை ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைத்தல்‌ பணியினை பூமிபூஜை செய்து, பணியினை மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள்‌ இன்று துவக்கி வைத்தார்.



இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தலைமை வகித்தார்‌. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ (TNSUDP) கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌

37க்குட்பட்ட தண்ணீர் பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.6 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட விநாயகபுரம்‌ பிரதான சாலையில்‌ ரூ.116 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.37 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, வார்டு எண்‌.28க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பிரதான சாலையில்‌ ரூ.174 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.73 கிலோ மீட்டர் தொலைவிற்கும்‌, ஆகமொத்தம்‌ ரூ.8.18 கோடி மதிப்பீட்டில்‌ 6.06 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலைகள்‌ புதுப்பித்தல்‌ பணிக்கு பூமிபூஜை செய்து, பணியினை மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்கள்‌ துவக்கி வைத்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32ல்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ விளாங்குறிச்சி கிராமத்திலுள்ள கோனார்‌ குட்டையை புனரமைத்தல்‌ பணிக்கு பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகரப்பொறியாளர்‌ இராமசாமி, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்‌, முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையாகிருஷ்ணன்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஏ.பி.நாகராஜன்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ திருமதி.மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, செந்தில்பாஸ்கர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...