திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக பெண் பிரமுகர் உட்பட 8 பேர் கைது..!

இவ்வழக்கில் ஈடுபட்ட சந்திரபோஸ், ரவிக்குமார், கோபிநாத் ஆகிய மூன்று பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக பெண் பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் வேலன் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் சீட் கவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அதிமுக மகளிர் அணி மாவட்ட துணை செயலாளரான திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

செல்வியின் தூண்டுதலின் பெயரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19ம் தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரவே கடத்தலில் ஈடுபட முயன்ற ஏழு பேரும் காரில் தப்பிச் சென்றனர்.



இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பாபு உத்தரவின் பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் பிரமுகர் மற்றும் சந்திரபோஸ், கோபிநாத், அஜய், விக்னேஷ், அருண்குமார், தினேஷ்குமார், ரவிக்குமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் ஈடுபட்ட சந்திரபோஸ், ரவிக்குமார், கோபிநாத் ஆகிய மூன்று பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...