பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
கோவை: பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.
இரவு நேரங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலை விபத்துகளிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கப் பக்தர்களின் கைகளில் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்களை அணிவித்து சாலை விபத்துகளிலிருந்து பக்தர்கள் பாதுகாக்கப்பட்டது.
அத்துடன் அவர்களுக்குத் தேவையான குடிநீர் உணவு வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நோய் தொற்று பரவ வேகமெடுத்து உள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தைப்பூச திருவிழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் பழனி சென்றன. அரசின் அனுமதி இல்லாததால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டது. தகுந்த பாதுகாப்பு தற்போது ஆலயங்களில் சாமி தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பழனியில் பெருமளவில் கூடியுள்ளனர். அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் விபத்து ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.
இரவு நேரங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலை விபத்துகளிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கப் பக்தர்களின் கைகளில் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்களை அணிவித்து சாலை விபத்துகளிலிருந்து பக்தர்கள் பாதுகாக்கப்பட்டது.
அத்துடன் அவர்களுக்குத் தேவையான குடிநீர் உணவு வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நோய் தொற்று பரவ வேகமெடுத்து உள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தைப்பூச திருவிழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் பழனி சென்றன. அரசின் அனுமதி இல்லாததால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டது. தகுந்த பாதுகாப்பு தற்போது ஆலயங்களில் சாமி தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பழனியில் பெருமளவில் கூடியுள்ளனர். அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் விபத்து ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.