தென்னை கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னப்பன் (72). இவருக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்துப்போனதை தொடர்ந்து 8 ஆழ் குழாய் கிணறுகள் தோண்டி விவசாயத்திற்கு தண்ணீர் பெற முயற்சித்துள்ளார். ஆனால் 80 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து விவசாயிகள் பலியாகிவருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...