வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜ வீதி பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் 14 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி ராஜ வீதி பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி 80வது வார்டு ரஞ்சய கவுண்டர் வீதியில் கடந்த 30ம் தேதி தூய்மைப் பணியாளர் பெண் ஒருவரை அங்கு வசித்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை எதிர் வழக்காக தூய்மைப் பணியாளர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் 14 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி ராஜ வீதி பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி 80வது வார்டு ரஞ்சய கவுண்டர் வீதியில் கடந்த 30ம் தேதி தூய்மைப் பணியாளர் பெண் ஒருவரை அங்கு வசித்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை எதிர் வழக்காக தூய்மைப் பணியாளர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.