புகாரின் பேரில் வீரா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே அடிதடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்து உள்ள சோமந்துரைசித்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், திமுக பிரமுகர். இவருக்கும் சோமந்துரை சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் அதிமுகவை சேர்ந்த கோபால் என்பவருக்கும், முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி கோபால் மற்றும் செல்வராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் கோபால் அவரது நண்பர்கள் சக்திவேல், வீரா, சுரேஷ் ஆகிய மூன்று பேரை அழைத்து வந்து செல்வராஜை தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, செல்வராஜ் கடந்த 4ம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று வீரா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்து உள்ள சோமந்துரைசித்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், திமுக பிரமுகர். இவருக்கும் சோமந்துரை சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் அதிமுகவை சேர்ந்த கோபால் என்பவருக்கும், முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி கோபால் மற்றும் செல்வராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவியின் கணவர் கோபால் அவரது நண்பர்கள் சக்திவேல், வீரா, சுரேஷ் ஆகிய மூன்று பேரை அழைத்து வந்து செல்வராஜை தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, செல்வராஜ் கடந்த 4ம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று வீரா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கோபால் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.