எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரியின் சார்பில் மேலாண்மை திறன் வளர்ச்சி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்


எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரி சார்பில் ஒரு நாள் மேலாண்மை திறன் வளர்ச்சிக்கான பயிற்சியை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படவுள்ளது. இதில், இறுதியாண்டு படிக்கும் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்களை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியானது மாணவர்களின் பணித்திறன், வேலைவாய்ப்புக்கான திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட உள்ளது. 

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சியில், வேலைவாய்ப்பிற்கான தங்களது விவரங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பது, மாறுபட்ட சிந்தனை ஊக்குவித்தல், குழு கலந்துரையாடல், அணியாக செயல்படுவது, மற்றும் தலைமை பண்புகள் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள எஸ்ஆர்ஐடி கல்லூரியில் செயல்பட்டு வரும் அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயிற்சி பிரிவால் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இணையதள தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், பங்குபெரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு தங்கும் இடமும் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு தங்களது கல்லூரி மாணவர்களை அணுப்ப விருப்பமுள்ள கல்லூரி பேராசிரியர்கள், எஸ்ஆர்ஐடி கல்லூரி பேராசிரியர்களான பி.சியாம்சுந்தர்- 9894146967 மற்றும் தீபா சி.குமார்- 8870653740 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...