கோவை கொடிசியா வளாகம் அருகே சாலை அமைக்க நில அளவை செய்யப்பட உள்ளது

கோயம்புத்தூர் மாநகராட்சி, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பற்றிய விவரங்களைக் கணக்கெடுக்க உள்ளதாகக் கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


கோவை: நில உரிமையாளர்களும் திட்டமிட்டபடி சாலைகளை அமைக்க சாலைக்கு தேவையான பகுதிகளை நன்கொடையாக வழங்க தயாராக உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பற்றிய விவரங்களைக் கணக்கெடுக்க உள்ளதாகக் கோவை மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிவாசிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு அளித்த மனுவை அடுத்து, கணக்கெடுப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் சாலை, அவிநாசி சாலை, சித்ரா சந்திப்பிலும், விளாங்குறிச்சி சாலை அவிநாசி சாலைகளை இணைக்கும் காளப்பட்டி சாலைக்கு மாற்றாகச் செயல்படும் சாலையை மேம்படுத்த வேண்டுமெனப் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலைகள் அமைக்க வேண்டும் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை அமைக்கும் திட்டமானது கொடிசியா மெயின் ரோட்டில் இருந்து அங்கு அமையப்பெற்றுள்ள தனியார்ப் பள்ளிக்கும் இடையில், வடக்கு நோக்கி என்ஆர்ஐ கார்டன், எஸ்.ஆர். அவென்யூ, கூட்டுறவு இ காலனி, சேரன் மாநகரை இணைத்து, மேற்கே விளாங்குறிச்சி ரோட்டிற்கு இணைக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட அனைத்து நில உரிமையாளர்களும் திட்டமிட்டபடி சாலைகளை அமைக்கச் சாலைக்குத் தேவையான பகுதிகளை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதால், மாநகராட்சியின் பணி எளிதானது. மீதமுள்ள, நிலத்தை ஆக்கிரமித்த சிலர், மாநகராட்சி பணியைத் துவங்கும் பச்சத்தில் காலி செய்யத் தயாராக உள்ளனர்.

இதனால், மிகக் குறைவான நில உரிமையாளர்களிடம் மட்டுமே மாநகராட்சிக்கு நிலத்திற்கான விலையைப் பேச வேண்டியிருந்தது என்று கூறினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...