கோவை கிணத்துக்கடவு அருகே அரசுப்பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று சென்றதால் பரபரப்பு - பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் அரசுப்பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 4b எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதிக்கு சென்றது.

அங்கு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வரும்போது நடுவழியில் பேருந்து பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்தனர்.

அப்போது கோவை - பொள்ளாச்சி சாலை சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென பேருந்தில் முன்பக்கமுள்ள இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது.



இதனால் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நிலைதடுமாறி சாமர்த்தியமாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார்.

அரசுப்பேருந்து சக்கரம் கழன்று விழுந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



இதையடுத்து, பொள்ளாச்சி போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் பேருந்து சக்கரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...