பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் அரசுப்பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 4b எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதிக்கு சென்றது.
அங்கு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வரும்போது நடுவழியில் பேருந்து பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்தனர்.
அப்போது கோவை - பொள்ளாச்சி சாலை சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென பேருந்தில் முன்பக்கமுள்ள இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது.

இதனால் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நிலைதடுமாறி சாமர்த்தியமாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார்.
அரசுப்பேருந்து சக்கரம் கழன்று விழுந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, பொள்ளாச்சி போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் பேருந்து சக்கரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 4b எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதிக்கு சென்றது.
அங்கு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வரும்போது நடுவழியில் பேருந்து பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்தனர்.
அப்போது கோவை - பொள்ளாச்சி சாலை சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென பேருந்தில் முன்பக்கமுள்ள இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது.
இதனால் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நிலைதடுமாறி சாமர்த்தியமாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார்.
அரசுப்பேருந்து சக்கரம் கழன்று விழுந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் பேருந்து சக்கரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.