வாளையாறு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.


கோவை: தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் பி னோய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் காய்கறி வாகன டிரைவர்களிடம் காய்கறியை லஞ்சமாக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 67 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பினோய் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜார்ஜ் பிரவீன், கிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...