தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
கோவை: தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகளைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் பி னோய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் காய்கறி வாகன டிரைவர்களிடம் காய்கறியை லஞ்சமாக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 67 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பினோய் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜார்ஜ் பிரவீன், கிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
அப்போது அதிகாரிகளைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் பி னோய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் காய்கறி வாகன டிரைவர்களிடம் காய்கறியை லஞ்சமாக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 67 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பினோய் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜார்ஜ் பிரவீன், கிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.