கோவையில் கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரம்- மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: பொதுமக்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌, அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்‌, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்து கண்காணித்திடச் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து வணிகர்கள்‌, மருத்துவர்கள்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்களுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று 03.01.2022 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கோவை மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ இரண்டு டோஸ்‌ தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திட வேண்டும்‌. வணிகர்கள்‌ தங்கள்‌ கடைகளுக்கு வரும்‌ வாடிக்கையாளர்களை கொரோனா பாதிக்காமல்‌ இருக்க அரசின்‌ பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளி மற்றும்‌ கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்‌ கொள்ள அறிவுறுத்திட வேண்டும்‌. அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்‌. தொடர்ந்து, அனைத்து வணிகாகளும்‌ கடைகளுக்கு முன்‌ கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளாரகள்‌ பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்‌.



அரசின்‌ வழிகாட்டுதலின்படி கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்குக் கட்டாயம்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்கப்படும்‌. அதேபோல்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, கிருமிநாசினி பயன்படுத்துதல்‌ மற்றும்‌ சமூக இடைவெளியைப் பின்பற்றாத தனிநபர்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்திட வேண்டும்‌. மேலும்‌, பொதுமக்கள்‌ அதிகம் கூடும்‌ இடங்களான வணிகவளாகங்கள்‌, திரையரங்குகள்‌, மார்க்கெட்‌ போன்ற பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரப்படுத்தப்படும்‌.

அரசு மேற்கொள்ளும்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா ‌, BST நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, மருத்துவர்கள்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌, உணவகங்கள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ உரிமையாளர்கள்‌, காய்கறி மார்க்கெட்‌ சங்கத்தினர்‌, துணிக்கடைகள்‌, நகைக்கடைகள்‌ மேலாளர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...