ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழர்கள் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். அப்போது, காவிரி பிரச்சனையில் அமைதியாக இருந்தது போல் மத்திய அரசு மவுனம் காக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும், சிங்கத்தை அடக்கக் கூறிய நீதிபதியை, வீடுகளில் சிங்கம் வளர்க்க அனுமதி கொடுத்தால் தாங்கள் சிங்கத்தை அடக்க தயார் எனவும், அனைத்து கிராமங்களிலும் சிங்கத்தை வளர்த்து அடக்கிக் கொள்கிறோம் எனவும் தெரிவித்த அவர்கள் தமிழகர்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பேசும் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...