குன்னூர் சாலை பகுதியில் காட்டு எருமை நுழைந்ததால் போக்குவரத்து பாதிப்பு


குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் ஞாயிறன்று காலை ஒரு காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



புத்தாண்டு நாளான ஞாயிறன்று (நேற்று) காலை குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒரு காட்டெருமை அந்த சாலையில் திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட மக்கள் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் காட்டெருமை சுற்றித்திறிய துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே காட்டெருமை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, இதுபோன்ற காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் இருவரை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதுபோல் நிகழாமல்  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...