ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தகவல்

ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் கட்சியின் விவகாரம் எனவும் நாளை சசிகலா முதல்வராகவும் முடியும் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி போன்றோர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.



கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை எனவும், தவறு நிதியமைச்சகத்தில் நடந்து இருப்பதாகவும், இதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க-விற்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைமை தேவைப்படுகின்றது. வரும் ஜனவரி 6, 7- ஆம் தேதிகளில் தேசியக் குழு நடக்கும் நிலையில் இதை பரீசிலிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவிற்கு திறமையில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்வதாகவும், சோனியா காந்தி என்ன தகுதிகளுடன் அரசியலுக்கு வந்தார் எனவும் ராகுல் காந்தி பட்டப்படிப்பு படிக்கவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிகட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை எனவும் தனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்து இருப்பதாகவும், ஜல்லிகட்டு விவகாரத்தில் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...