வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்:- "கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் வ.ஊ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. இந்த வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பூங்கா வடிவமைப்பாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பொது மக்களை கவரும் விதத்தில் தரம் உயர்த்தவும், புதுப்பொலிவுடனும் தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பிப்பதற்காக பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ் செயல்திட்ட அறிக்கை பற்றி விளக்கிக் கூறினார். பூங்காவை புதுப்பிப்பதற்கான முதல் தொகுதி செயல் திட்ட அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கை விரைவில் அனுப்பப்படவுள்ளது. மேலும், இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கையில் பூங்கா கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், மத்திய பூங்காவில் அதிகாரகளின் ஒப்புதல் பெற்றப்பின் நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதியுடன் வேலையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வனத்துறை துணை இயக்குநர் மற்றும் கால்நடை அலுவலர் மனோகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பெருமாள்சாமி, பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...