வால்பாறையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட மிலாது விழா

வால்பாறையில் சுன்னத் ஜமா அத் ஜுமா மசூதி மதரச மஹாலில் மிலாது விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஹாஜி. பூக்கோயதங்கல் தலைமை வகித்தார். ஹாஜி. என்.கே.கமாலுதீன் முத்தவல்லி, ஜனாப். அல்லாஜ் தலைவர் பி.ஆர்எஸ். அப்துல் காதர், செயலாளர் பஷீர் அஹமது, இமாம் இப்ராஹிம் சஃகாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



முன்னதாக மவுலூதும், தப்ரூக் விநியோகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முனவ்விருல் இஸ்லாம் மதரசா மாணவர்களின் தப்புமுட்டு, நபிகள் நாயகம் பற்றி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் சேரன் யூசுப், குஞ்சுமுகமது, மனாப் ஜமாஅத் கமிட்டியினர் ரிலீப் கமிட்டியினை செய்திருந்தனர். 

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை உஸ்தாத் மார்கள் அபூபக்கர், மஜீத் ஷெபீக் ஆகியோர்கள் செய்துவைத்தனர். முகமது முன்னின்று நடத்தினார். விழாவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை விதவைகள் மற்றும் கணவனால் கவிடப்பட்ட பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. இறுதியில் முகமது ஜாபர் நன்றி கூறினார்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...