சசிக்குமார் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இருவர் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை


இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இருவர் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித்தொடர்பாளரான சசிக்குமார் சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏராளமானோரை நேரடியாக விசாரித்ததோடு, சம்மன் அனுப்பி அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த முபாரக் மற்றும் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரை நேரில் ஆஜாராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால் இருவரும் கடந்த 23 ம் தேதி முதல் மாயமாகியிருந்ததும் அவர்களது குடும்பத்தினருக்கும் சரியான தகவல் அளிக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் போலீசாருக்கு தெரிவிக்குமாறும் சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். சசிக்குமார் கொலை செய்யப்பட்டு 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...