உணவு பொருட்களை பழைய செய்தி தாள்களில் உபயோகிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்


அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கப்படும் வடை, பஜ்ஜி போன்டா உள்ளிட்ட உணவு பொருட்களை பழைய நாளிதழ்களில் வைத்து பரிமாறுவதோ, பொட்டலம் செய்து கொடுப்பது உடலுக்கு தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகள் உண்பதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். செய்தி தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கும் தரும் வேதிபொருட்களால் ஆனது. மேலும் பழைய செய்திதாள்களில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியதாகும். இது அஜிரணம், குடல் சம்மந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய் சம்மந்தமான பாதிப்புகளை வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் பெரியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

எனவே, அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இதற்கு பதிலாக வாழை இலை போன்ற தீங்கு தராத பொருட்களை கொண்டு உணவு பொருட்களை சுற்றி கொடுக்க வேண்டும் என்றும் பாலிதீன் பொருட்களில் டீ, காபி உணவு போன்ற சூடான பானங்களை பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனவும். மேலும், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கு கால அவகாசம் ஆகஸ்ட் 2016 க்கு பின் நீட்டிக்கப்படவில்லை. எனவே அனைத்து தரப்பினர்களும் உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...