ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மரங்கள்


மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் அரசு பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய புங்கமரங்களை அகற்றுவது குறித்து ஓசை அமைப்பின் சையது-விற்கு மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசை மற்றும் பசுமை தேசம் தன்னார்வலர் அமைப்பின் சையது மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த மரங்களை வேருடன் அகற்றி கோவைபுதூரில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடவு செய்தனர்.



இதுகுறித்து ஓசை சையது நமது நிருபரிடம் கூறியதாவது:-

மாநகராட்சி பொது இடத்தில் இருந்த மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி தன்னார்வ அமைப்பினரை தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதன் முறை. சமீபத்தில் பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களை ஊக்குவித்துள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...