ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மரங்கள்


மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் அரசு பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய புங்கமரங்களை அகற்றுவது குறித்து ஓசை அமைப்பின் சையது-விற்கு மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசை மற்றும் பசுமை தேசம் தன்னார்வலர் அமைப்பின் சையது மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த மரங்களை வேருடன் அகற்றி கோவைபுதூரில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடவு செய்தனர்.



இதுகுறித்து ஓசை சையது நமது நிருபரிடம் கூறியதாவது:-

மாநகராட்சி பொது இடத்தில் இருந்த மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி தன்னார்வ அமைப்பினரை தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதன் முறை. சமீபத்தில் பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களை ஊக்குவித்துள்ளது" என்றார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...