தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.!!

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 19.11.2021ல் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் 2022-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



தலைவர் ஜே.ஜேம்ஸ்

பொதுச்செயலாளர் G.பிரதாப்சேகர்

பொருளாளர் M.லீலாகிருஷ்ணன்

சட்ட ஆலோசகர் இல.இராஜேந்திரன் B.com. BL

கௌரவ ஆலோசகர்கள் A.சண்முகசுந்தரம், R.சந்திரசேகரன்.Ex.MC,R.சேகர்

துணைத் தலைவர்கள் A.விசுவநாதன், P.கார்த்திகேயன், S.பாரத்ரவி, T.இராஜேந்திரன், S.V.வெங்கடேஷ்

மாவட்டச் செயலாளர்கள் S.ரவிச்சந்திரன், P.V.தங்கராஜ், A.கோவிந்தராஜ், P ராமசாமி, R.D.நித்தியானந்தம், K.முருகன், G.மகேஷ்குமார்,

துணை செயலாளர்கள் D.ஜெய்கணேஷ், S.பரமசிவம், K.பாலன், R சிவதாணுபிள்ளை, M.சக்திவேல், S.சதிஷ்குமார், M.K.குணசேகரன், P.மார்க்கண்டன் உள்ளிட்ட 71 பேர்கள் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.



இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-

1. தொழில்துறைக்கு முக்கிய ஆதாரமான மூலப் பொருள்களின் விலையேற்றம் ஓராண்டில் 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி ஒட்டு மொத்த தொழிலும் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்டர்களை மட்டும் நம்பி வாழும் குறுந்தொழில்கள் முழுமையாக வேலைகள் இழந்து செய்வது அறியாமல் வங்கிக் கடன் தனியார் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் தொழில் கூட்டங்களின் வாடகை தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு மூலப்பொருள் விலை ஏற்றம் இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் உள்ள தொழில்களைப் பாதுகாக்க மத்திய அரசு இரண்டு லட்சம் மாநில அரசு ஒரு லட்சம் 50% சதம் மானியத்துடன் வட்டியில்லாக் கடனாக வழங்கி குறுந்தொழில்கள் பாதுகாக்க வேண்டும்

என்ற தீர்மானம்.

2. குறு-சிறு தொழில் முனைவோர் நலன் கருதி தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் வாரியத்தில் குறு சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

3. தமிழக முதலமைச்சர் குறுந்தொழில் சிறு தொழில் முனைவோர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்திக்க வாய்ப்பு அளித்து நேரடியாகப் பிரச்சனைகளைக் கேட்டு அரிந்து உதவிட வேண்டுகிறோம்.

4.தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகள் மூலப் பொருட்களின் விலை உயர்வு கண்டித்து நடத்த உள்ள போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

5. கடும் நெருக்கடியில் உள்ள குறுந்தொழில்களுக்குத் தமிழக அரசு கோவையில் அரசுக்குச் சொந்தமான இடங்களைத் தேர்வு செய்து மாவட்டங்களில் அதிக அளவில் குறுந்தொழில் பேட்டை உருவாக்க வேண்டும் அதற்குத் தமிழக அரசு உதவிட வேண்டுகிறோம்.

6. குறுந்தொழில் முனைவோர்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு 25% சதவீதம் வழங்கும் மானியம் பெற ISO-வேண்டும் என்ற புதிய நிபந்தனைகள் அரசு திரும்பப் பெற வேண்டும் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறச் சட்டங்கள் எளிமையாக்க வேண்டும்.



உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...