தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.!!

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்டம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 19.11.2021ல் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் 2022-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



தலைவர் ஜே.ஜேம்ஸ்

பொதுச்செயலாளர் G.பிரதாப்சேகர்

பொருளாளர் M.லீலாகிருஷ்ணன்

சட்ட ஆலோசகர் இல.இராஜேந்திரன் B.com. BL

கௌரவ ஆலோசகர்கள் A.சண்முகசுந்தரம், R.சந்திரசேகரன்.Ex.MC,R.சேகர்

துணைத் தலைவர்கள் A.விசுவநாதன், P.கார்த்திகேயன், S.பாரத்ரவி, T.இராஜேந்திரன், S.V.வெங்கடேஷ்

மாவட்டச் செயலாளர்கள் S.ரவிச்சந்திரன், P.V.தங்கராஜ், A.கோவிந்தராஜ், P ராமசாமி, R.D.நித்தியானந்தம், K.முருகன், G.மகேஷ்குமார்,

துணை செயலாளர்கள் D.ஜெய்கணேஷ், S.பரமசிவம், K.பாலன், R சிவதாணுபிள்ளை, M.சக்திவேல், S.சதிஷ்குமார், M.K.குணசேகரன், P.மார்க்கண்டன் உள்ளிட்ட 71 பேர்கள் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.



இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-

1. தொழில்துறைக்கு முக்கிய ஆதாரமான மூலப் பொருள்களின் விலையேற்றம் ஓராண்டில் 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி ஒட்டு மொத்த தொழிலும் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்டர்களை மட்டும் நம்பி வாழும் குறுந்தொழில்கள் முழுமையாக வேலைகள் இழந்து செய்வது அறியாமல் வங்கிக் கடன் தனியார் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் தொழில் கூட்டங்களின் வாடகை தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு மூலப்பொருள் விலை ஏற்றம் இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் உள்ள தொழில்களைப் பாதுகாக்க மத்திய அரசு இரண்டு லட்சம் மாநில அரசு ஒரு லட்சம் 50% சதம் மானியத்துடன் வட்டியில்லாக் கடனாக வழங்கி குறுந்தொழில்கள் பாதுகாக்க வேண்டும்

என்ற தீர்மானம்.

2. குறு-சிறு தொழில் முனைவோர் நலன் கருதி தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் வாரியத்தில் குறு சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

3. தமிழக முதலமைச்சர் குறுந்தொழில் சிறு தொழில் முனைவோர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்திக்க வாய்ப்பு அளித்து நேரடியாகப் பிரச்சனைகளைக் கேட்டு அரிந்து உதவிட வேண்டுகிறோம்.

4.தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகள் மூலப் பொருட்களின் விலை உயர்வு கண்டித்து நடத்த உள்ள போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

5. கடும் நெருக்கடியில் உள்ள குறுந்தொழில்களுக்குத் தமிழக அரசு கோவையில் அரசுக்குச் சொந்தமான இடங்களைத் தேர்வு செய்து மாவட்டங்களில் அதிக அளவில் குறுந்தொழில் பேட்டை உருவாக்க வேண்டும் அதற்குத் தமிழக அரசு உதவிட வேண்டுகிறோம்.

6. குறுந்தொழில் முனைவோர்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு 25% சதவீதம் வழங்கும் மானியம் பெற ISO-வேண்டும் என்ற புதிய நிபந்தனைகள் அரசு திரும்பப் பெற வேண்டும் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறச் சட்டங்கள் எளிமையாக்க வேண்டும்.



உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...