கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றியமைக்க வேண்டும், வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும், தடுப்பூசி முகாமை மாலை 5 மணிக்குள் நிறைவு செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து நிலை செவிலியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், துணை சுகாதார மையங்களுக்கு செவிலியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய பிறகு தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்றியமைக்க வேண்டும், வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும், தடுப்பூசி முகாமை மாலை 5 மணிக்குள் நிறைவு செய்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து நிலை செவிலியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், துணை சுகாதார மையங்களுக்கு செவிலியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய பிறகு தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.