கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கொண்டாட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேட்டியில் கூறியதாவது;
இந்திய நாட்டில் விவசாயிகளினால் நிராகரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு, திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு 600 விவசாயிகளின் வீர மரணத்திற்குப் பிறகு, ஓராண்டு காலம் பல போராட்டங்களை முன் எடுத்து நடத்திய பிறகு, பல துன்பங்களை அனுபவித்து, விவசாயிகள் மீது வேனை ஏற்ற கொலை செய்த பின்பும் அமைதி காத்து மிக வழுவாக நின்ற இந்திய நாட்டின் விவசாய பெருங்குடி மக்களுக்கு தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம்.
யாராலும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைவணங்குகிறோம்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்திலே தீர்மானங்களை நிறைவேற்றிய அனைத்து மாநில அரசுக்கும் தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடிய விவசாயிகளுக்கும், உயிர் நீட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம்.
மேலும், உயிர் இழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் பொதுத் துறை சொத்துகள் விரைவில் மீட்டு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.