வேளாண் சட்டங்கள் வாபஸ்; போராட்டத்தில் உயிரிழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன்

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கோவை: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கொண்டாட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேட்டியில் கூறியதாவது;

இந்திய நாட்டில் விவசாயிகளினால் நிராகரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டு, திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு 600 விவசாயிகளின் வீர மரணத்திற்குப் பிறகு, ஓராண்டு காலம் பல போராட்டங்களை முன் எடுத்து நடத்திய பிறகு, பல துன்பங்களை அனுபவித்து, விவசாயிகள் மீது வேனை ஏற்ற கொலை செய்த பின்பும் அமைதி காத்து மிக வழுவாக நின்ற இந்திய நாட்டின் விவசாய பெருங்குடி மக்களுக்கு தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம்.

யாராலும் அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைவணங்குகிறோம்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்திலே தீர்மானங்களை நிறைவேற்றிய அனைத்து மாநில அரசுக்கும் தலை வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடிய விவசாயிகளுக்கும், உயிர் நீட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம்.

மேலும், உயிர் இழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் பொதுத் துறை சொத்துகள் விரைவில் மீட்டு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...